Published : 14 Dec 2021 03:09 AM
Last Updated : 14 Dec 2021 03:09 AM

டாஸ்மாக் கடையை அகற்ற ராமநாதபுரம் ஆட்சியரிடம் மனு :

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. அப்போது ஆட்சியர் சங்கர் லால் குமாவத்திடம் கடல் தொழிலாளர் சங்கத்தினர் (சிஐடியூ) மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:

திருவாடானை அருகே தாமோதரன்பட்டினம் மீனவ கிராமத்தில் பள்ளி மாணவர்கள் செல்லும் பாதை அருகில் பார் வசதியுடன் கூடிய டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இதை மாற்ற கிராம மக்கள் வலியுறுத்தினர். இது தொடர்பாக திருவாடானை வட்டாட்சியர் செப்.10-ம் தேதி நடத்திய சமாதானக் கூட்டத்தில், மதுக்கடை அகற்றப்படும் என்று தெரிவித்தார். ஆனால் அகற்றவில்லை. மதுக்கடையை அகற்றாவிட்டால் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு நடை பயணமாக சென்று காத்திருப்புப் போராட்டம் நடத்துவோம் என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x