மாநில அளவிலான ஆண்கள் கபடிப் போட்டியில் - முதலிடம் பிடித்த திருச்சி போலீஸ் அணிக்கு பாராட்டு :

மாநில அளவிலான கபடிப் போட்டியில் முதலிடம் பிடித்த திருச்சி மாநகர காவல் ஆயுதப்படை அணியினரைப் பாராட்டிய காவல் ஆணையர் க.கார்த்திகேயன்.
மாநில அளவிலான கபடிப் போட்டியில் முதலிடம் பிடித்த திருச்சி மாநகர காவல் ஆயுதப்படை அணியினரைப் பாராட்டிய காவல் ஆணையர் க.கார்த்திகேயன்.
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அருகேயுள்ள லெட்சுமணன்பட்டியில் மாநில அளவிலான ஆண்கள் கபடிப் போட்டி அண்மையில் நடைபெற்றது. அதில் 40 அணிகள் பங்கேற்றன. 28 சுற்றுகள் கொண்ட இத்தொடரில் திருச்சி மாநகர காவல் ஆயுதப்படை அணியும், திருநெல்வேலி துர்காம்பிகை கபடி அணியும் மோதின. இதில் திருச்சி மாநகர காவல் ஆயுதப்படை அணி வெற்றி பெற்று சுழற்கோப்பை, ரூ.30 ஆயிரம் ரொக்கப் பரிசை வென்றது.

இதையடுத்து ஆயுதப்படை உதவி ஆணையர் ரவிச்சந்திரன், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான 12 பேர் கொண்ட கபடி அணியினரை காவல் ஆணையர் க.கார்த்திகேயன் நேற்று தனது அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்துப் பாராட்டினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in