Published : 08 Dec 2021 04:10 AM
Last Updated : 08 Dec 2021 04:10 AM

கரூரில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் :

கரூரில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சரும், அமைப்புச் செயலாளருமான ம.சின்னசாமி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் நாளை(டிச.9) நடைபெறும் ஆர்ப்பாட்டம் குறித்தும், கட்சித் தேர்தல் பணிகள் குறித்தும் முன்னாள் அமைச்சரும், மாவட் டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசினார்.

கூட்டத்தில், மாவட்ட துணைச் செயலாளர் சிவசாமி, மாவட்ட ஊராட்சித் தலைவர் எம்.எஸ்.கண்ணதாசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் எஸ்.திருவிகா, கரூர் மத்திய நகரச் செயலாளர் வை.நெடுஞ்செழியன், என்.எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சியினர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x