திருச்சியில் 2,800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் :

திருச்சியில் 2,800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் :
Updated on
1 min read

திருச்சி புத்தூர் பழைய மீன் மார்க்கெட் அருகில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் அப்பகுதியில் சோதனை நடத்துமாறு ஆட்சியர் சு.சிவராசு உத்தரவிட்டார்.

அதன்பேரில் உணவுப் பொருள் வழங்கல் பிரிவு அப்பகுதிக்குச் சென்று சோதனையிட்டபோது 2 சுமை ஆட்டோக்களில் தலா 50 கிலோ எடை கொண்ட 56 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்ததும், கடத்தலில் ஈடுபட்டவர்கள் தப்பிச் சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து அங்கிருந்த 2,800 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த உணவுப்பொருள் வழங்கல் பிரிவு அதிகாரிகள், அவற்றை திருச்சி குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு போலீ ஸிடம் ஒப்படைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in