மேலூர் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் :

மேலூர் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் :
Updated on
1 min read

மேலூர் பகுதியில் நேற்று 4 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதில் மங்களாம்பட்டி, மாங்குளப்பட்டி, கண்மாய்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்தது. கருங்காலக்குடி பகுதியில் மயமதுமனி கண்மாய் நிரம்பி, அருகிலுள்ள பள்ளி வாசல் மற்றும் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது.

மலம்பட்டியில் கணேசன் என்பவரது வீடு, கிடாரிபட்டி மணிமுருகன், செல்வகுமாரின் கூரை வீடு, அடைக்கன்னின் ஓட்டு வீடு உள்ளிட்டவை இடிந்து சேதமாகின.

தகவல் அறிந்த மாவட்ட எஸ்பி பாஸ்கரன் நேற்று காலை பாதித்த மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in