Published : 17 Nov 2021 03:08 AM
Last Updated : 17 Nov 2021 03:08 AM

தா.பழூர் அருகே பள்ளியில் மாணவியை பாம்பு கடித்தது :

அரியலூர் மாவட்டம் தா. பழூர் அருகே பள்ளியின் கதவை திறந்த மாணவியை பாம்பு கடித்ததால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தா.பழூரை அடுத்த கோடாலி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் மகள் கனிமொழி(11). இவர், அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று காலை பள்ளிக்கு சென்று கதவை திறந்து உள்ளே சென்றபோது, கதவின் பின்னால் இருந்த பாம்பு ஒன்று மாணவியின் காலில் கடித்ததுடன், காலையும் சுற்றிக்கொண்டது. இதையடுத்து மாணவி கூச்சல் போட்டுள்ளார். மாணவியின் சப்தம் கேட்டு அங்கு வந்த ஆசிரியர்கள், பாம்பை அடித்துவிட்டு மாணவியை ஜெயங்கொண்டம் அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x