Published : 04 Nov 2021 03:13 AM
Last Updated : 04 Nov 2021 03:13 AM
நாமக்கல்: மோகனூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அதற்குரிய ஆவணங்களை சமர்பித்து பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மோகனுார் வட்டாட்சியர் (பொ) க.மாதேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மோகனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வழக்குகள் தொடர்பாக 105 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை மோகனூர் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாகனங்களின் விவரங்கள் மோகனூர் வட்டாட்சியர் அலுவலக அறிவிப்பு பலகையில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் தங்களது வாகனங்களுக்கான ஆவணங்களை 15 நாட்களுக்குள் மோகனூர் காவல் நிலையத்தில் வழங்கி வாகனங்களை மீட்டுக்கொள்ளலாம். 15 நாட்களுக்குள் உரிமம் கோரப்படாத வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்பட்டு அதில் கிடைக்கும் தொகை அரசு கணக்கில் செலுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT