Published : 30 Oct 2021 03:14 AM
Last Updated : 30 Oct 2021 03:14 AM

இளைஞரிடம் ரூ.12.50 லட்சம் மோசடி :

மதுரை

வேலை வாங்கி தருவதாக இளைஞரிடம் ரூ.12.50 லட்சம் முறைகேடு செய்த 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

மதுரை அண்ணாநகர் அன்பு நகரைச் சேர்ந்தவர் மகேசுவரன் (30). வேலூர் மாவட்டம், காட்பாடி பாரதிநகரைச் சேர்ந்த சந்திரன், அவரது மகன் பிரேம்குமார், மற்றும் பிரதீப், ஜெயந்தி ஆகியோர் மகேசுவரனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.12 லட்சத்து 50 ஆயிரத்தை பெற்றுள்ளனர். ஆனால், அவர்கள் அரசு வேலை வாங்கித் தரவில்லை. கொடுத்த பணத்தையும் அவர்கள் திருப்பித் தராமல் இழுத்தடிப்பு செய்து ஏமாற்றினர்.

இது தொடர்பாக அண்ணாநகர் போலீஸில் மகேசுவரன் புகார் செய்தார். அதன் அடிப்படையில் சந்திரன், பிரேம்குமார் உள்ளிட்ட 4 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x