Published : 29 Oct 2021 03:12 AM
Last Updated : 29 Oct 2021 03:12 AM

திருமண மண்டபத்தில் பொருட்கள் திருட்டு :

சேலத்தில் பூட்டியிருந்த திருமண மண்டபத்தில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

சேலம், செவ்வாய்ப்பேட்டை, நரசிம்மசெட்டி தெருவைச் சேர்ந்தவர் சண்முகம் (47). இவரது குடும்பத்துக்கு சொந்தமான திருமண மண்டபம் செவ்வாய்ப்பேட்டை, கெத்தை ராமலிங்கம் தெருவில் உள்ளது. திருமண மண்டபம் தொடர்பாக சண்முகத்துக்கும், அவரது சகோதரருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, சேலம் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

இதனால், கடந்த மூன்று ஆண்டாக திருமண மண்டபம் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இந் நிலையில், திமண மண்டபத்தின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக சண்முகத்துக்கு தகவல் தெரியவந்தது. திருமண மண்டபத்துக்கு சென்று பார்த்த சண்முகம், அங்கிருந்த பித்தளை விளக்குகள், ஏசி, 150 பிளாஸ்டிக் சேர்கள் உள்பட ரூ.2 லட்சம் மதிப்பு பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து சண்முகம் செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தில், அளித்த புகாரின் அடிப்படையில், திருட்டில் ஈடுபட்ட நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x