Published : 29 Oct 2021 03:13 AM
Last Updated : 29 Oct 2021 03:13 AM

வீடு கட்ட சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு :

பிரதம மந்திரியின் குடியிருப்பு திட்டம் (ஊரகம்) மற்றும் பசுமை வீடு திட்டங்களின் கீழ் தகுதியுள்ள ஏழை மக்களுக்கு வீடுகள் மற்றும் குடியிருப்புகள் கட்டி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன.

இவ்வாறு கட்டப்படும் குடியிருப்புகளில் மொத்த ஒதுக்கீட்டில் 15 சதவீதம் இஸ்லாமியர்கள், சீக்கியர், புத்த மதத்தினர், ஜைன மற்றும் பார்சி ஆகிய சிறுபான்மையின மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப் பட்டு வருகிறது. எனவே, சிறுபான்மையின மக்கள் 15 சதவீதம் இட ஒதுக்கீட்டை பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x