அவிநாசி பகுதியில் 5,000 வாழை மரங்கள் சேதம் :

அவிநாசி பகுதியில் 5,000 வாழை மரங்கள் சேதம் :
Updated on
1 min read

திருப்பூர் மாவட்டம், அவிநாசி பகுதியில் கடந்த இரு நாட்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

கடந்த 24-ம் தேதி, மாவட்டத்தில் அதிகபட்சமாக அவிநாசியில் 76 மி.மீ மழை பதிவானது. அவிநாசி, கருவலூர், உப்பிலிபாளையம், நடுவச்சேரி, சின்னேரிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக குலை தள்ளிய நிலையில் இருந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சாய்ந்தன. உரிய இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என வாழை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து, சேத விவரம் குறித்து கணக்கிடும் பணியில் வருவாய்த் துறை, தோட்டக்கலைத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in