போலி ஏடிஎம் கார்டு மூலம் பண மோசடி :

போலி ஏடிஎம் கார்டு மூலம் பண மோசடி :
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டம், கோட்டக் குப்பத்தில் பாரத ஸ்டேட் வங்கி யின் ஏடிஎம் இயங்கி வருகிறது. இந்த ஏடிஎம்மில் 10 போலியான ஏடிஎம் கார்டுகள் மூலம் கடந்த 6-ம் தேதி ரூ 30 ஆயிரம், 7-ம் தேதி ரூ 1,29,500 , 14-ம் தேதி ரூ 50 ஆயிரம் என மொத்தம் ரூ 2,09,500 பணத்தை யாரோ மோசடி செய்து எடுத்துள்ளதாக இவ்வங்கியில் கிளை மேலாளராக பதவி வகிக்கும் பிருந்தா ரங்கநாயகி என்பவர்கோட்டக்குப்பம் காவல் நிலை யத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in