முதியவர் மனைவியுடன் தற்கொலை :

முதியவர் மனைவியுடன் தற்கொலை :
Updated on
1 min read

கண்டமங்கலம் அருகே பெரிய பாபு சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன் (82).

இவர் தன் மனைவி பொற் கலையுடன் (75) வசித்து வந்தார். இத்தம்பதியினருக்கு லோகநாதன் என்ற மகன், ஜெயா, சரோஜினி, சிவகாமி என்ற 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் புதுச்சேரியில் வெவ்வேறு பகுதியில் வசித்து வருகின் றனர்.

இந்நிலையில், நேற்று காலை நீண்ட நேரம் கடந்தும் ரங்கநாதன் வீட்டின் கதவு திறக்காமல் இருந்தது. அக்கம் பக்கம் உள்ளவர்கள் கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்த போது, எறும்பு கொல்லி மருந்துகளை உட்கொண்டு இருவரும் தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது. பெற்ற பிள்ளைகள் யாரும் கவனிக்காமல் விட்டதால் முதிய தம்பதி இந்த நிலைக்குச் சென்றதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.

இத்தகவல் அறிந்த கண்ட மங்கலம் போலீஸார், சம்பவ இடத்திற்குச் சென்று இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத் தனர்.

வழக்குப்பதிவு செய்து,விசாரணை மேற்கொண்டுள் ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in