மீலாது நபியை முன்னிட்டு ஊர்வலம் :

மீலாது நபியை முன்னிட்டு ஊர்வலம் :
Updated on
1 min read

மேலப்பாளையத்தில் மீலாதுநபியை முன்னிட்டு புகைப்பட கண்காட்சி, பாரம் பரிய சிலம்பாட்டம் மற்றும் சமய நல்லி ணக்க ஊர்வலம் நடைபெற்றது.

முஸ்லிம்களால் மீலாதுநபி நேற்று கொண்டாடப்பட்டது. இதை யொட்டி மேலப்பாளையத்தில் மீலாதுநபி கமிட்டி சார்பில் பஜார் திடலில் இஸ்லாமிய புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டது. இதன் தொடக்க விழாவுக்கு காஜா முகைதீன் தலைமை வகித்தார். முகம்மது யூசுப், டாக்டர் ஷாஜஹான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்காட்சியை உசேன் தொடங்கி வைத்தார். நலத்திட்ட உதவிகளை அஸ்கர் அலி வழங்கினார்.

தொடர்ந்து சிறுவர், சிறுமியர் மற்றும் பெரியவர்களுக்கான பாரம்பரிய சிலம்பாட்ட போட்டி நடத்தப்பட்டது. ஏற்பாடுகளை அமைப்பாளர் வி.எஸ். அமானுல்லா செய்திருந்தார். மாலையில் சமய நல்லிணக்க ஊர்வலம் விஎஸ்டி ஹாமீம் பள்ளி வாசலில் தொடங்கியது. ஊர்வலத்தில் திரளான முஸ்லிம்கள் பங்கேற்றனர். ஊர்வலம் அம்பை சாலை வழியாக புதுமனை குத்பா பள்ளிவாசலில் நிறைவடைந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in