Published : 16 Oct 2021 06:13 AM
Last Updated : 16 Oct 2021 06:13 AM

தேனி கல்லூரியில் ஆதார் சிறப்பு முகாம் :

தேனி நாடார் சரஸ்வதி பொறி யியல், தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் இந்திய அஞ்சல் துறை சார்பில் ஆதார் சிறப்பு முகாம் கல்லூரி வளாகத்தில் நடந்தது.

கல்லூரிச் செயலாளர் கே.எஸ்.காசிபிரபு தலைமை வகித்தார். இணைச் செயலாளர் ஏ.ராஜ்குமார் முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கான புதிய ஆதார் சேர்க்கை, திருத்தம், முகவரி மற்றும் மொபைல் எண் மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

உறவின்முறைத் தலைவர் கே.பி.ஆர்.முருகன், பொதுச்செயலாளர் டி.ராஜமோகன், பொருளாளர் எம்.பழனியப்பன், அஞ்சல் துறை கண்காணிப்பாளர் வெ.பரமசிவம், கல்லூரி முதல்வர் சி.மதளைசுந்தரம், துணை முதல்வர் என்.மாதவன், வேலைவாய்ப்பு அலுவலர் சி.கார்த்திகேயன் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x