Published : 12 Oct 2021 03:15 AM
Last Updated : 12 Oct 2021 03:15 AM

தஞ்சாவூர் தஞ்சாவூர் நகர துணை மின் நிலையத்தில் இன்று(அக்

தஞ்சாவூர்

தஞ்சாவூர் நகர துணை மின் நிலையத்தில் இன்று(அக்.12) பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக, யாகப்பா நகர், அருளானந்த நகர், அருளானந்த அம்மாள் நகர், பிலோமினா நகர், காத்தூன் நகர், சிட்கோ, அண்ணாநகர், காமராஜ் நகர், பாத்திமா நகர், கண்ணன் நகர், ராஜப்பாநகர், கணபதி நகர், டிபிஎஸ் நகர், ஜெஜெ நகர், பாலாஜி நகர், அண்ணாமலை நகர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சாரம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் ஜோ.சுகுமார் தெரிவித்துள்ளார்.

கும்பகோணம்

சாக்கோட்டை துணை மின் நிலையத்தில் இன்று (அக்.12) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால், இன்று காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை அரியதிடல், காளிமுத்து நகர், கூட்டுறவு நகர், மலையப்ப நகர், சிவபுரம், கிருஷ்ணாபுரம், அண்டக்குடையான் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் க.சங்கர் தெரிவித்துள்ளார்.

கரூர்

கரூர் 110 கிலோ வாட் துணை மின் நிலையத்தில் இன்று(அக்.12) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மற்றும் உயர் அழுத்த மின் கம்பித் தொடர் நிறுவும் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக, காமராஜபுரம், கே.வி.பி. நகர், செங்குந்தபுரம், பெரியார் நகர், ஜவகர் பஜார், திருமாநிலையூர், அக்ரஹாரம், காந்தி நகர், ரத்தினம் சாலை, கோவை சாலை, வடிவேல் நகர், ராமானுஜம் நகர், திருக்காம்புலியூர், ஆண்டாங்கோவில் சாலை, செல்லாண்டிபாளையம், சுக்காலியூர், சேலம் புறவழிச்சாலை, ஆண்டாங்கோவில் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மின் கோட்டத்துக்குட்பட்ட சிறுவாச்சூர் மற்றும் எசனை துணை மின் நிலையங்களில் இன்று(அக்.12) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

இதன் காரணமாக, இங்கிருந்து மின் விநியோகம் பெறும் சிறுவாச்சூர், அய்யலூர், விளாமுத்தூர், செட்டிக் குளம், நாட்டார்மங்கலம், குரூர், நாரணமங்கலம், மருதடி, பொம்மனப்பாடி, கவுள்பாளையம், தீரன் நகர், நொச்சியம், விஜயகோபாலபுரம், செல்லியம்பாளையம், புது நடுவலூர், ரங்கநாதபுரம், செஞ்சேரி, தம்பிரான்பட்டி, மலையப்ப நகர், செட்டிக்குளம், அய்யலூர் நீரேற்று நிலையங்கள், கோனேரிபாளையம், சொக்கநாதபுரம், ஆலம்பாடி, எசனை, கீழக்கரை, பாப்பாங்கரை, ரெட்டமலை சந்து, அனுக்கூர், சோமண்டாபுதூர், வேப்பந்தட்டை, பாலையூர், மேட் டாங்காடு, திருப்பெயர், கே.புதூர், மேலப்புலியூர், நாவலூர் ஆகிய கிராமங்களில் இன்று காலை 9.45 மணி முதல் பராமரிப்புப் பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x