Published : 12 Oct 2021 03:15 AM
Last Updated : 12 Oct 2021 03:15 AM

தஞ்சாவூரில் ரூ.9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய : ஊராட்சி ஒன்றிய துணை ஆணையர் கைது :

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பனகல் கட்டிடத்தில் தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் துணை ஆணையராகவும், அலுவலக மேலாளராகவும் பணியாற்றுபவர் எம்.சாமிநாதன்(55). தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை ராஜராஜன் நகரைச் சேர்ந்தவர் அரவிந்தன். இவர், தன்னுடைய பெயரிலும், தனது தாயார் பெரியலும் உள்ள 3 மனைகளை வரைமுறைப்படுத்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுத்திருந்தார். விண்ணப்பத்தை பரிசீலித்த சாமிநாதன், மனைப்பிரிவுக்கு அங்கீகாரம் அளிக்க ரூ.9 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அரவிந்தன், இதுகுறித்து தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸில் புகார் அளித்தார். போலீஸாரின் ஆலோசனைப்படி, அரவிந்தன் நேற்று இரவு 7.30 மணியளவில் ரூ.9 ஆயிரத்தை சாமிநாதனிடம் கொடுத்தார்.அப்போது, அங்கு மறைந்திருந்த தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி ராஜூ, இன்ஸ்பெக்டர் சசிகலா தலைமையிலான போலீஸார், சாமிநாதனை கையும் களவுமாக பிடித்து, அவரை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x