கிருஷ்ணகிரியில் காவலாளி கொலை :

கிருஷ்ணகிரியில் காவலாளி கொலை :
Updated on
1 min read

கிருஷ்ணகிரி அருகேயுள்ள செம்படமுத்தூர் அடுத்த மிட்டபாறை கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (83). இவர் மாதேப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மாந்தோட்டத்தில் காவலாளியாக பல ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், பெருமாளுக்கும் அவரது உறவினரான அப்பாபுலி என்பவருக்கும் இடையே தகராறு இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் இருந்த அப்பாபுலி, தோட்டத்தில் இருந்த பெருமாளை கடுமையாக தாக்கி, தலை மீது கல்லை போட்டுவிட்டு அங்கிருந்து தப்பினார்.

இதில், படுகாயம் அடைந்த பெருமாளை நேற்று காலை அவரது உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக கிருஷ்ணகிரி தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அப்பாபுலியை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in