Published : 19 Sep 2021 03:15 AM
Last Updated : 19 Sep 2021 03:15 AM

மதுரை தரகர் கொலை வழக்கில் : சிங்கம்புணரி இளைஞர் கைது :

சிங்கம்புணரி: மதுரை தரகர் கொலையில் சிங்கம்புணரி இளைஞர் கைது செய்யப்பட்டார்.சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி மயானத்தில் நேற்று முன்தினம் காலை மதுரை அவனியாபுரம் பராசக்தி நகரைச் சேர்ந்த நிலத்தரகர் ராமச்சந்திரன் (62) உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார். அவரது உடல் பாதி எரிந்த நிலையில் இருந்தது. இது தொடர்பாக சிங்கம்புணரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் சிங்கம்புணரியைச் சேர்ந்த சத்தியமூர்த்தியை (27) போலீஸார் நேற்று கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

ராமச்சந்திரன் ஏற்கெனவே சிங்கம்புணரியில் குடியிருந்தவர். அதன் அடிப்படையில், அவர் அடிக்கடி சிங்கம்புணரிக்கு வந்து செல்வது வழக்கம். கடந்த 16-ம் தேதி இரவு ராமச்சந்திரனும், சத்தியமூர்த்தியும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். இதில் சத்தியமூர்த்தி வைத்திருந்த மதுவை ராமச்சந்திரன் குடித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சத்தியமூர்த்தி, ராமச்சந்திரனை கட்டையால் தாக்கிக் கொலை செய்துள்ளார். மேலும் கொலையை மறைக்க உடலை எரிக்க முயன்றுள்ளார் என்று கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x