Published : 19 Sep 2021 03:15 AM
Last Updated : 19 Sep 2021 03:15 AM

ஈரோடு, நாமக்கல்லில் உள்ளாட்சி இடைத்தேர்தல் - திமுக, அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு :

பெருந்துறை ஊராட்சி ஒன்றியம் 10-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும்வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

பெருந்துறை ஊராட்சி ஒன்றிய 10-வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினராக ஜெயக்குமார் இருந்தார். அவர் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து 10-வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் பதவி காலி இடமாக அறிவிக்கப்பட்டது.

தற்போது 9 மாவட்டங்களில் நடக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி காலியாக உள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதிமுக சார்பில் பெருந்துறை ஊராட்சி ஒன்றிய 10-வது வார்டு வேட்பாளராக எஸ்.என்.பாலகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவரை முன்னாள் அமைச்சரும்,ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான கே.சி.கருப்பணன், பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயக்குமார் ஆகியோர் குள்ளம்பாளையம் ஊராட்சி, மேட்டுபுதூர் ஊராட்சி, பொன்முடி ஊராட்சிப் பகுதிகளில் உள்ள கட்சி நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்து வைத்தனர்.

நாமக்கல்லில் திமுக வேட்பாளர்

இதுபோல, நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஊராட்சிஒன்றியத்திற்கு உட்பட்ட 15-வது வார்டு இடைத்தேர்தலில் திமுக சார்பில் கு.முத்துக்கருப்பன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்ட ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடஏ.ஆர்.துரைசாமியை வேட்பாளராக கட்சியின் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x