திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் மேலும் 14 பேர் தற்கொலை முயற்சி :

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் மேலும் 14 பேர் தற்கொலை முயற்சி :
Updated on
1 min read

திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள சிறப்பு முகாமில் இலங்கை, வங்கதேசம், நைஜீரியா, சூடான், பல்கேரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 116 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் தண்டனை காலம் முடிந்த அனைவரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி இலங்கை தமிழர்களான முகுந்தன், நிரூபன் ஆகியோர் கடந்த 11-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.

இவர்களிடம் கடந்த 18-ம் தேதி வருவாய்துறை, காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தச் சென்றபோது, கத்தியால் உடலைக் கிழித்துக் கொண்டும், தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டும் 16 இலங்கை தமிழர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தொடர் உண்ணாவிரதம் இருந்த முகுந்தன், நிரூபன் உடல்நிலை நேற்று மோசமடைந்ததால் இருவரையும் ஆம்புலன்ஸில் ஏற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவர்களின் கோரிக்கைக்கு ஆதரவாக ரவிகரன், அன்பு, பெர்னாண்டோ, மயூரன் ஆகிய 4 இலங்கை தமிழர்கள் கத்தியால் கைகளில் கிழித்துக் கொண்டும், ஜெயரூபன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 10 பேர் தூக்க மாத்திரை சாப்பிட்டும் தற்கொலைக்கு முயன்றனர். அனைவரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in