Last Updated : 15 Aug, 2021 03:25 AM

 

Published : 15 Aug 2021 03:25 AM
Last Updated : 15 Aug 2021 03:25 AM

வட்டாரக் கல்வி அலுவலர்கள் பணிக்கான - தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பும் பணி நியமனம் இல்லை : வெற்றி பெற்ற தேர்வர்கள் கலக்கம்

தமிழ்நாட்டில் 97 வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14, 15, 16-ம் தேதிகளில் இணைய வழியில்ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப் பட்டது.

தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்க ளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. சுமார் 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இத் தேர்வை எழுதினர். இவ்வாறு இணைய வழியில் நடத்தப்பட்ட தேர்வின் முடிவுகள் வழக்கமாக ஓரிரண்டு மாதங்களில் வெளியி டப்படும். ஆனால் வட்டாரக் கல்வி அலுவலர் தேர்வின் முடிவுகள் சுமார் 11 மாதங்க ளுக்குப் பின்னர் கடந்த ஜனவரி 27-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப் பட்டது. தேர்வு முடிவுகள் வெளியாகி 6 மாதங்கள் கடந்த நிலையில் இன்னும் சான்றிதழ் சரிபார்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப் படவில்லை. சட்டப்பேரவைத் தேர்தல் மற் றும் கரோனா பரவலால் இப்பணிகள் தொய்வுஅடைந்திருக்கலாம் எனக் கருதினாலும் இவற்றைக் கடந்து மற்ற அனைத்துப் பணியாளர் தேர்வு வாரியங்களும் செயல் படத் தொடங்கி விட்டன.

மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்க ளுக்கான தேர்வினை நடத்திய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பணிநியமன ஆணையை கடந்த மாதமே வழங்கிவிட்டது. ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியம்கடந்த 5 மாதங்களாக எவ்விதச் செயல்பாடும் இன்றி அமைதி காத்து வருகிறது. இணையவழியில் தேர்வு நடத்தப்படுவதன் நோக்கமே தேர்வுப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்பதேயாகும். ஆனால் இத்தேர்விற்குப் பிறகு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயல் பாடானது அந்நோக்கத்திற்கு எதிரான வகையில் அமைந்துள்ளது என்று தேர்வு எழுதியவர்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் 130 க்கும் மேற்பட்ட வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் அவற்றை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் இத்தேர்வின் வெற்றியாளர்களுக்கு உடனடியாக சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகளை முடித்து, அவர்களுக்குப் பணிநியமன ஆணை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர் பார்ப்பாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x