Published : 09 Jul 2021 03:15 AM
Last Updated : 09 Jul 2021 03:15 AM

கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கடனுதவி :

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கரோனா தொற்று ஊரடங்கால் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் ஆகியோர், குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபர் உயிரிழந்திருப்பின் அவர்களது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார வளர்ச்சிக் கழகம் ‘ஸ்மைல்’ என்ற கடன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஈட்டக்கூடிய நபரின் வயது 18 முதல் 60-க்குள் இருக்க வேண்டும்.

அதிகபட்சமாக திட்டத்தொகை ரூ.5 லட்சம் வரை இருக்க வேண்டும். திட்டத்தொகையில் 80 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.4 லட்சம் வரை கடன் வழங்கப்படும். மீதமுள்ள 20 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். ஆண்டுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்தில் கடன் தொகை வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடியவர் கரோனா தொற்றால் உயிரிழந்ததற்கான ஆவணங்களுடன் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x