செட்டிக்குளம் முருகன் கோயில் சத்திரத்தில் - உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கி உதவ கோரிக்கை :

செட்டிக்குளம் முருகன் கோயில் சத்திரத்தில் -  உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கி உதவ கோரிக்கை  :
Updated on
1 min read

பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி கோயில் சத்திரத்தில் சாதுக்கள், யாசகர்கள் சிலர் தங்கியுள்ளனர். இவர்கள் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வழங்கும் உணவு, அன்பளிப்பு ஆகியவற்றை கொண்டு சாப்பிட்டு பசியாறி வந்தனர்.

இந்நிலையில், கோயில்கள் மூடப்பட்டு பக்தர்கள் வராததால் அவர்கள் வருமானம் இல்லாமலும், உணவுக்கு வழியின்றியும் தவித்து வருகின்றனர். எனவே, இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உணவு வழங்கி உதவ வேண்டும் என பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in