திருநங்கைகளுக்கு நிவாரண உதவிகள் :

திருநங்கைகளுக்கு நிவாரண உதவிகள்  :
Updated on
1 min read

பெரம்பலூர் அருகே எளம்பலூரில் திருநங்கைகளுக்கு கரோனா நிவாரண உதவிகளை எம்எல்ஏ பிரபாகரன் வழங்கினார்.

பெரம்பலூர் அருகே எளம்பலூர் ஊராட்சி தண்ணீர் பந்தல் பகுதியில் திருநங்கைகள் பலர் வசித்து வருகின்றனர். தற்போது கரோனா பரவலால் அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையறிந்த எம்.பி ஆ.ராசா தனது சொந்த நிதியிலிருந்து வழங்கிய அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்கள் மற்றும் நிவாரணத் தொகை ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை எம்எல்ஏ பிரபாகரன் அண்மையில் திருநங்கைகளுக்கு வழங்கினார். இதில், திருநங்கைகள் சங்கத் தலைவி ராணியம்மாள், மனிஷா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in