

பேராவூரணி எம்எல்ஏ அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு, கட்டிடத்துக்கு வெளிர் மஞ்சள் நிறத்தில் புதிய வண்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக திமுகவைச் சேர்ந்த என்.அசோக்குமார் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.
இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளால், பூட்டப்பட்டிருந்த, பேராவூரணி எம்எல்ஏ அலுவலகம் திறக்கப்பட்டு, அங்கு பொதுப்பணித் துறை அலுவலர்கள் மேற்பார்வையில் கடந்த சில நாட்களாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த அலுவலகம் கடந்த அதிமுக ஆட்சியின்போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிடித்ததாக கூறப்படும் பச்சை வண்ணத்தில் இருந்தது. தற்போது இந்த அலுவலகம் வெளிர் மஞ்சள் நிறத்துக்கு மாறி உள்ளது.