Published : 12 May 2021 03:15 AM
Last Updated : 12 May 2021 03:15 AM

கோவில்பட்டி மார்க்கெட்டில் அதிகாரிகள் ஆய்வு :

கோவில்பட்டி

கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாராயணன், வட்டாட்சியர் அமுதா, நகராட்சி ஆணையாளர் ராஜாராம், கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் தங்கராஜ் மற்றும் அதிகாரிகள் நேற்று காலை கோவில்பட்டி தினசரி மார்க்கெட் பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

“கோவில்பட்டி மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் கரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு கொண்டு சென்று, அவரது உத்தரவுப்படி கடைகளை வேறு இடங்களுக்கு மாற்றுவது குறித்து முடிவெடுக்கப்படும்” என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x