Published : 06 Apr 2021 03:16 AM
Last Updated : 06 Apr 2021 03:16 AM

புதுகை மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 1,902 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு :

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,902 வாக்குச்சாவடிகளில் இன்று(ஏப்.6) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை(தனி), விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 13.57 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் உள்ள 1,902 வாக்குச்சாவடிகளில் 125 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன.

16 வேட்பாளர்களுக்கும் குறைவாக உள்ள கந்தர்வக்கோட்டை மற்றும் ஆலங்குடி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தலா ஒரு வாக்குப்பதிவு இயந்திரமும் மற்ற தொகுகிகளில் தலா 2 வாக்குப்பதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

இதற்காக 3,401 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,331 கட்டுப்பாட்டு கருவிகள், 2,482 விவிபாட் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. மாவட்டத்தில் 9,128 வாக்குப்பதிவு அலுவலர்கள் பணிபுரிகின்றனர்.

மாவட்ட எஸ்.பி எல்.பாலாஜி சரவணன் தலைமையில் மத்திய ஆயுதப்படையைச் சேர்ந்த 687 பேர், தமிழ்நாடு சிறப்பு போலீஸார் 180 பேர் உட்பட 3,406 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x