Published : 06 Apr 2021 03:16 AM
Last Updated : 06 Apr 2021 03:16 AM

‘மது குடித்துவிட்டு வருவோரை வாக்களிக்க அனுமதிக்க கூடாது’ :

பெரம்பலூர்: தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச் செயலாளரும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி சுயேச்சை வேட்பாளருமான வ.கவுதமன் நேற்று பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ப.வெங்கடபிரியாவிடம் மனு அளித்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு குன்னம் தொகுதியில் திமுக, அதிமுகவினர் தேர்தல் விதிகளை மீறி வாக்களிக்க பணப்பட்டுவாடா செய்கின்றனர். டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் மது ஆறு ஓடுகிறது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவருக்கு அபராதம், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்வது, போதைப் பொருள் உட்கொண்ட விளையாட்டு வீரர்களுக்கு விளையாட தடைவிதிப்பது போன்று, குடித்துவிட்டு வாக்களிக்க வரும் எந்த நபரையும் வாக்களிக்க அனுமதிக்க கூடாது.

மது அருந்தி விட்டு வாக்களிக்க வரும் வாக்காளர்களை அடுத்து வரும் 3 தேர்தல்களில் வாக்களிக்க தடை விதித்து சட்டம் இயற்ற வேண்டும். இதுகுறித்து தேர்தல் ஆணையம், அரசு நிர்வாகம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x