Published : 06 Mar 2021 03:15 AM
Last Updated : 06 Mar 2021 03:15 AM

புதுக்கோட்டை மாவட்டத்தில் மதுபான கடத்தலைத் தடுக்க அலுவலர்கள் நியமனம் :

புதுக்கோட்டை: சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை மற்றும் கடத்தலைத் தடுப்பதற்கு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் டாஸ்மாக் தொடர்பான புகார்களைப் பெற்று, டாஸ்மாக் மாவட்ட மேலாளருக்கு தெரிவிப்பதற்கான ஒருங்கிணைப்பு அலுவலராக டாஸ்மாக் கிடங்கு மேலாளர் எஸ்.செல்வராஜ் (9443442295) மற்றும் தினந்தோறும் மதுபானக் கடைகளை கண்காணிப்பதற்கான சிறப்பு பறக்கும் படை அலுவலராக உதவி மேலாளர் எஸ்.லட்சுமி நாராயணன் (9942347104) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, டாஸ்மாக் தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் தெரிவிக்கலாம் என ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x