Published : 06 Mar 2021 03:15 AM
Last Updated : 06 Mar 2021 03:15 AM

தமிழகத்தில் பொது சேவை உரிமை சட்டத்தை அமல்படுத்தக் கோரி வழக்கு : தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

திருச்சி மாவட்டம் பகளவாடியைச் சேர்ந்த குருநாதன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

நாட்டில் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் சேவை பெறும் உரிமை சட்டம் அமலில் உள்ளது. இருப்பினும் சில மாநிலங் களில் தான் சட்டத்தை அமல்படுத்த தனித் துறை அமைக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலங்களில் பொது சேவையை அளிக்க கால உச்சவரம்பு பின்பற்றப்படுகிறது.

ஹரியாணா மாநிலத்தில் குடும்ப அட்டைக்கு 15 நாட்கள், மின் இணைப்புக்கு 8 நாட்கள், சாதி சான்றிதழ் பெற 7 நாட்கள், நிலப்பதிவு, ஓட்டுநர் உரிமத்துக்கு ஒரு நாள், குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புக்கு 12 நாள் என கால உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொதுச் சேவையை பெற லஞ்சம் கொடுக்கும் நிலை உள்ளது. எனவே, தமிழகத்தில் பொதுச் சேவை தொடர்பான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத, தவறான தகவல் அளிக்கும், கால தாமதம் செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் பொதுச் சேவை சட்டத்தை அமல் படுத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப் பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்து, தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x