Published : 04 Mar 2021 05:53 AM
Last Updated : 04 Mar 2021 05:53 AM

தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் :

நாகர்கோவில்: தமிழக சட்டப்பேரவை தேர்தலுடன் சேர்ந்து, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில், பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக 18 வயது நிரம்பிய வாக்காளர்கள் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் அதிநவீன மின்னணு வாகனம் வாயிலாக, தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் இன்று தொடங்கியது. கடந்த தேர்தலில் வாக்குப்பதிவு குறைவாக பதிவான பகுதிகளில், ஏப்ரல் 3-ம் தேதி வரை இந்த வாகனம் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடும். நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) வீராச்சாமி, மகளிர் திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜாண் ஜெகத் பிரைட் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x