Published : 04 Mar 2021 05:53 AM
Last Updated : 04 Mar 2021 05:53 AM

தாம்பரம் யார்டில் மேம்பாட்டு பணியால் - 30 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் :

தாம்பரம் யார்டில் மேம்பாட்டுப் பணிகள் நடக்கவுள்ளதால், 30 விரைவு ரயில்களின் சேவையில் வரும் 14-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தாம்பரம் யார்டில் மேம்பாட்டுப் பணிகள் வரும் 14-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடக்கவுள்ளது. இதனால், விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, புதுச்சேரி - சென்னை எழும்பூர் (06116/06115) ரயில்களின் சேவை வரும் 20, 21-ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

காரைக்குடி - சென்னை எழும்பூர் (02606), மதுரை - சென்னை எழும்பூர் (02636) ரயில்கள் வரும் 14-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும். இதேபோல், கன்னியாகுமரி - சென்னை எழும்பூர் (02634), ராமேசுவரம் - சென்னை எழும்பூர் (02206), குருவாயூர் - சென்னை எழும்பூர் (06128) ஆகிய ரயில்கள் வரும் 19-ம் தேதி செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும். மேலும், திருநெல்வேலி - சென்னை எழும்பூர் (02632) ரயில் வரும் 19, 20-ம் தேதிகளில் செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும்.

குருவாயூர் - சென்னை எழும்பூர் (06128) ரயில் வரும் 19-ம் தேதி விழுப்புரம் வரையும், காகிநாடா போர்ட் - செங்கல்பட்டு (07644), காச்சிகுடா - செங்கல்பட்டு (07652), செகந்திராபாத் - தாம்பரம் (02760) ரயில்கள் வரும் 19, 20-ம் தேதிகளில் சென்னை எழும்பூர் வரையும் இயக்கப்படும். தஞ்சாவூர் - சென்னை எழும்பூர் (06866), மதுரை - சென்னை எழும்பூர் (02638), மன்னார்குடி - சென்னை எழும்பூர் (06180) ஆகிய ரயில்கள் வரும் 20-ம் தேதி செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படுகிறது.

மாற்றுப்பாதையில் இயக்கம்

புவனேஸ்வர் - தாம்பரம் சிறப்பு ரயில் (08496) வரும் 19-ம் தேதி பெரம்பூர், அரக்கோணம், காஞ்சிபுரம் மாற்றுவழியாகவும், தூத்துக்குடி - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (02694), திருச்செந்தூர் - சென்னை எழும்பூர் (06106) சிறப்பு ரயில்கள் வரும் 20-ம் தேதி காஞ்சிபுரம், மேலப்பாக்கம், திருத்தணி மாற்றுவழியாகவும் இயக்கப்படுகின்றன.

செங்கல்பட்டில் இருந்து புறப்படும்

இதேபோல், சென்னை எழும்பூர் - மதுரை (02635), சென்னை எழும்பூர் - காரைக்குடி (02605) சிறப்பு ரயில்கள் வரும் 14-ம் தேதி 21ம் தேதி வரையில் செங்கல்பட்டில் இருந்து புறப்படும். சென்னை எழும்பூர் - தூத்துக்குடி (02693), கொல்லம் சிறப்பு ரயில் (06723) வரும் 20-ம் தேதியிலும், செங்கோட்டை சிறப்பு ரயில் (02611) வரும் 20, 21-ம் தேதிகளிலும், திருச்சிராப்பள்ளி சிறப்பு ரயில் (06795), திருசெந்தூர் சிறப்பு ரயில் (06105), ராமேஸ்வரம் சிறப்பு ரயில் (06851) ஆகியவை வரும் 21-ம் தேதி செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டுச் செல்லும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தாம்பரம் யார்டில் மேம்பாட்டுப் பணிகள் வரும் 14-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடக்கவுள்ளது. இதனால், விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x