தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய படையினர் கிருஷ்ணகிரி வருகை

தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக மங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி வந்த மத்திய தொழில் பாதுகாப்புப்படையினர்.
தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக மங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி வந்த மத்திய தொழில் பாதுகாப்புப்படையினர்.
Updated on
1 min read

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் 92 பேர் நேற்று கிருஷ்ணகிரி வந்தனர்.

தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளதால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் இருந்த தமிழக முன்னாள், இன்னாள் முதல்வர்களின் படங்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் படங்கள் அகற்றப்பட்டன. மேலும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு வழங்கப் பட்டிருந்த அரசு வாகனங்களும் தேர்தல் பணிக்காக திரும்ப பெறப்பட்டன.

நேற்று காலை முதல் அரசியல் கட்சிக் கொடி கம்பங்கள், சுவர் விளம்பரங்களை அழிக்கவும் அந்தந்த கட்சியினருக்கு தேர்தல் அலுவலர்கள் அறிவுறுத்தினர். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் பாதுகாப்பு பணிக்காக கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து மத்திய தொழில் பாதுகாப்புப்படையைச் சேர்ந்த 92 வீரர்கள் நேற்று கிருஷ்ணகிரி வந்தனர். அவர்கள், கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் தங்க வைக்க அழைத்துச் செல்லப்பட்டு, பணிகள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in