குருக்கள்பட்டி கூட்டுறவு சங்கத்தை பொதுமக்கள் முற்றுகை

குருக்கள்பட்டி கூட்டுறவு சங்கத்தை பொதுமக்கள் முற்றுகை
Updated on
1 min read

குருக்கள்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டிடத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டிடத்தை, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

“தமிழக அரசு அறிவித்தபடி கடன் தள்ளுபடி சான்றிதழ் கேட்டால், கடன் தள்ளுபடி பெற ரூ.1 லட்சத்துக்கு ரூ.5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை கேட்கிறார்கள்.

நேற்று முன்தினம் மாலை வரை தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் நகைக் கடன் வழங்கி மோசடி செய்துள்ளனர். ஏழை, எளிய மக்கள் பயன் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழக முதல்வர் அறிவித்துள்ள திட்டத்தில் இந்த கூட்டுறவு சங்கத்தில் உள்ள சிலர் முறைகேடு செய்வதால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது” என்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சின்னகோவிலான்குளம் போலீஸார், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in