Published : 24 Feb 2021 03:18 AM
Last Updated : 24 Feb 2021 03:18 AM

கார் மோதி தம்பதி உயிரிழப்பு

பழநி அருகே பாறைப் பட்டியைச் சேர்ந்தவர்கள் கருப்புச்சாமி(70), மயிலாத் தாள்(65). இவர்கள் தோட்ட வேலை முடித்துவிட்டு, தங்களது பேரன் வர்ஷன்(5) உடன் இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பினர். தொப்பம்பட்டி அருகே ஆலவலசு பிரிவில் சென்றபோது பழநியில் இருந்து தாராபுரம் சென்ற கார் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் மயிலாத்தாள், கருப்புச்சாமி ஆகியோர் உயிரிழந்தனர். சிறுவன் வர்ஷன் பலத்த காயமடைந்தார். இவரை பழநி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். கீரனூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x