Published : 24 Feb 2021 03:18 AM
Last Updated : 24 Feb 2021 03:18 AM

பழநி கல்லூரியில் உலக தாய்மொழி தின விழா

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள பழநியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி யில், தமிழ்த்துறை சார்பில் உலக தாய்மொழி தின விழாவை முன்னிட்டு கருத்தரங்கு நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் பிரபாகர் தலைமை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.

ஆய்வு மாணவி சங்கமி வரவேற்றார். எழுத்தாளர் முத்து மாணிக்கம் ‘தாய் மொழியின் சிறப்பு’ என்ற தலைப்பில் பேசி னார்.

உதவிப் பேராசிரியர் யசோதா கருத்தரங்கை நெறிப்படுத்தினார். பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், தமிழ்த்துறை மாணவர்கள் உள்ளிட்டோர் கருத் தரங்கில் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x