Published : 24 Feb 2021 03:19 AM
Last Updated : 24 Feb 2021 03:19 AM

குப்பையில் வீசப்பட்ட பெண் சிசு மீட்பு

திருச்சி விமான நிலையம் அருகிலுள்ள காவேரி நகர் பகுதியில் உள்ள காலிமனையில் உள்ள குப்பை நிறைந்த பகுதியில் நேற்று குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது.

இது குறித்து விமான நிலைய போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, அங்கு சென்ற நுண்ணறிவுப் பிரிவு காவலர் ஜெயக்குமார், சாக்குப்பையில் சுற்றப்பட்ட நிலையில் இருந்த குறை பிரசவத்தில் பிறந்த பெண் சிசுவை மீட்டு அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் அரசு மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து விமான நிலைய போலீஸார் வழக்குபதிவு செய்து, பெண் சிசுவை குப்பையில் வீசிச் சென்றது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x