அரசு பஸ் ஓட்டுநர் நடத்துநருக்குகண் சிகிச்சை முகாம்

அரசு பஸ் ஓட்டுநர் நடத்துநருக்குகண் சிகிச்சை முகாம்
Updated on
1 min read

தேசிய சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு விழாவை முன்னிட்டு, திண்டுக்கல்லில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் ஓட்டுநர், நடத்துநர், தொழிலாளர்களுக்கு கண் சிகிச்சை முகாம் நடந்தது.

அரசு போக்குவரத்துக் கழக திண்டுக்கல் மண்டலப் பொதுமேலாளர் கணேசன் முகாமைத் தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் அரசு போக்குவரத்துக் கழக கிளைகளில் பணிபுரியும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தொழிலாளர்கள் கண் பரிசோதனை செய்து கொண்டனர். தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழநிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் வழங்கப் பட்டன.

நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்துக் கழக துணை மேலாளர்கள் முகமதுராவுத்தர், ஜெகதீசன், உதவி மேலாளர் பழமலை, கிளை மேலாளர் விஸ்வநாதன், உதவிப் பொறியாளர்கள் தினகரன், பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in