Published : 14 Jan 2021 03:20 AM
Last Updated : 14 Jan 2021 03:20 AM

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கோடை சீசனுக்கான நடவுப் பணி தொடக்கம்

குன்னூர்

நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடைபெறவுள்ள பழக் கண்காட்சிகாக 3.10 லட்சம் மலர் நாற்றுகளை நடவு செய்யும் பணி நேற்று தொடங்கியது.

மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுவது வழக்கம். இதயொட்டி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடைபெறும் பழக் கண்காட்சியைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். இவர்களைக் கவரும் வகையில் உள்நாடு மட்டுமின்றி அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி மலர் நாற்றுகளை நடவு செய்யும் பணி நேற்று தொடங்கியது. தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் குருமணி, உதவி இயக்குநர் அனிதா ஆகியோர், 3.10 லட்சம் மலர் நாற்றுகளை நடவு செய்யும் பணியைத் தொடங்கிவைத்தனர். சால்வியா, டேலியா, மேரிகோல்டு, ஸ்வீட் வில்லியம், சூரியகாந்தி உள்ளிட்ட மலர் நாற்றுகளை நடவு செய்யும் பணியில் தோட்டக்கலைத் துறை ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x