Published : 14 Jan 2021 03:21 AM
Last Updated : 14 Jan 2021 03:21 AM

நீர்பிடிப்பு பகுதியில் தொடர்மழை மூல வைகையில் வெள்ளப்பெருக்கு

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையால் வருசநாடு மொட்டப்பாறை அருகே மூலவைகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வருசநாடு

நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர்மழையால் மூல வைகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக வருசநாடு மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் மூலவைகையில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே, ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் வைகை ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்று தண்டோரா மூலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி 62.5அடியாக இருந்தது. நீர்வரத்து விநாடிக்கு 1,455 கனஅடியாகவும், வெளியேற்றம் 69 கன அடியாகவும் உள்ளது.

இதேபோல் வைகையின் துணை ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x