Published : 14 Jan 2021 03:21 AM
Last Updated : 14 Jan 2021 03:21 AM

அய்ய நாடார் கல்லூரியில் பொங்கல் விழா

சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

கல்லூரி மகளிர் குழு சார்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு முதல்வர் செ.அசோக் தலைமை வகித்தார். முன்னதாக வணிகவியல் உதவிப் பேராசிரியர் பிரியா மீரா வரவேற்றார். மாணவிகளுக்கு கவிதை, கோலப் போட்டிகளும், பேராசிரியர்களுக்கு பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன. கவிதைப் போட்டியில் ஆங்கிலத் துறை 3-ம் ஆண்டு மாணவி மார்டினா முதலிடம், கணிதத் துறை 3-ம் ஆண்டு மாணவி சௌரிநாச்சியார் 2-ம் இடம், தாவரவியல் 3-ம் ஆண்டு மாணவி கார்த்திகா 3-ம் இடம் வென்றனர். கோலப் போட்டியில் பிபிஏ மாணவிகள் கௌரி, யோகலட்சுமி ஆகியோர் முதல் பரிசையும், தாவரவியல் மாணவிகள் சித்ராதேவி, சபரிபிரியா 2-ம் பரிசையும், கணிப்பொறியியல் துறை மாணவிகள் திலகவதி, விஷ்ணுபிரியா 3-ம் பரிசையும் வென்றனர். முதல்வர் செ.அசோக் பரிசுகளை வழங்கினார். உதவிப் பேராசிரியை கார்த்திகைசெல்வி நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x