Published : 14 Jan 2021 03:21 AM
Last Updated : 14 Jan 2021 03:21 AM

2,500 போலீஸார் பாதுகாப்பு

மதுரைக்கு ராகுல்காந்தி வருவதால் 2,500 போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

விமான நிலையத்தில் இருந்து அவனியாபுரம் வரை 3 இடங்களில் நகர் காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, திமுக இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டை பார்க்க மதுரை வந்துள்ளனர்.

பலத்த பாதுகாப்பு

காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா உத்தரவின் பேரில், ராகுல்காந்தி வரும் வழிகள், அவனியாபுரம், ஜல்லிக்கட்டு வாடிவாசல் பகுதி உள்ளிட்ட இடங்களில் சுமார் 2,500 போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். காவல் துணை ஆணையர்கள் சிவபிரசாத், பழனிக்குமார், பாஸ்கரன், சுகுமாறன் ஆகி யோர் பாதுகாப்பை ஆய்வு செய்கின்றனர்.

வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் அவனியாபுரம் வாடிவாசல் பகுதி உள்ளிட்ட இடங்களில் மெட்டல் டிடெக்டர் கருவி, மோப்ப நாய் மூலம் தீவிர சோதனையிட்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x