Published : 14 Jan 2021 03:21 AM
Last Updated : 14 Jan 2021 03:21 AM

மதுரை மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை அச்சத்தில் ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர்

மதுரையில் ஜனவரி மாதத்தில் பெய்யும் அடைமழையால் ஜல்லிக்கட்டுப் போட்டியை தடையில்லாமல் நடத்த முடியுமா? என விழாக்குழுவினர் கவலை அடைந்துள்ளனர்.

மதுரையில் கடந்த சில நாட்களாக அடைமழை பெய்கிறது. இன்று அவனியாபுரத்திலும், நாளை பாலமேட்டிலும், நாளை மறுநாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடக்கிறது. ராகுல்காந்தி அவனியாபுரம் ஜல்லிக்கட்டை பார்வையிட வருவதால், இந்தப் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அடைமழை பெய்து வருவதால் ஜல்லிக்கட்டு விழாக்கள் தடையில்லாமல் நடக்குமா என மாவட்ட நிர்வாகமும், விழாக்குழுவினரும் கவலை அடைந்துள்ளனர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு ஏராளமானோர் ஸ்பான்சர் செய்துள் ளனர். மேலும், விழா ஏற்பாட்டுக்கும் பெருமளவில் செலவிட்டுள்ளனர்.

போட்டியில் பங்கேற்க டோக்கன் பெற்ற காளை உரிமையாளர்கள் நேற்று காலை முதலே வாகனங்களில் காளைகளை ஏற்றிக் கொண்டு தமிழகம் முழுவதும் இருந்து அவனியாபுரத்துக்கு வந்துள்ளனர்.

இந்தச் சூழலில் அடைமழையால் ஜல்லிக்கட்டு தடைப்பட்டால் காளை உரிமையாளர்கள், வீரர்கள், ஸ்பான்சர் செய்தவர்கள் என அனைத்துத் தரப்பினரும் மிகுந்த ஏமாற்றம் அடைவர். எனவே ஜல்லிக்கட்டு விழா குழுவினர் கவலை அடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x