Published : 14 Jan 2021 03:22 AM
Last Updated : 14 Jan 2021 03:22 AM
தருமபுரி மாவட்டம் புலிகரை அருகே ஏரியில் மண் கடத்திய டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸார் ஓட்டுநரை கைது செய்தனர்.
மதிகோன்பாளையம் போலீஸார் நேற்று முன் தினம் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். புலிகரை -கோவிலூர் சாலையில் சிறப்பு உதவி ஆய்வாளர் குப்புசாமி தலைமையிலான போலீஸார் ரோந்தில் ஈடுபட்டபோது குந்தியம்மன் கோயில் பகுதியில் அவ்வழியே சென்ற டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர். அதில் மண் இருப்பது தெரிய வந்தது. மேலும், கோவிலூர் அடுத்த ஓடஞ்சேரி ஏரியில் இருந்து செங்கல் சூளை ஒன்றுக்கு இந்த மண் கடத்திச் செல்லப்படுவதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே, 1 யூனிட் மண்ணுடன் டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸார், டிராக்டர் ஓட்டுநரான கோவிலூரைச் சேர்ந்த ரமேஷ்(31) என்பவரையும் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT