பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து 61,664 கனஅடி தண்ணீர் திறப்பு தாமிரபரணி கரையோர குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது வீடுகள், உறைகிணறுகள், பயிர்கள் சேதம்- மக்கள் வெளியேற்றம்

திருநெல்வேலியில் ஆற்றின் நடுவே இருக்கும், குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயிலைச் சூழ்ந்து வெள்ளம் ஓடியது.படங்கள்: மு. லெட்சுமி அருண், என்.ராஜேஷ்.
திருநெல்வேலியில் ஆற்றின் நடுவே இருக்கும், குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயிலைச் சூழ்ந்து வெள்ளம் ஓடியது.படங்கள்: மு. லெட்சுமி அருண், என்.ராஜேஷ்.
Updated on
1 min read

பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து 61,664 கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டதால், கரையோரத்தில் உள்ள குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் கடந்த சில நாட்களுக்குமுன் நிரம்பியதால், உபரி நீர் திறந்துவிடப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 4 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால், அணைகளுக்கு நீர்வரத்து பெருமளவு அதிகரித்தது. இதனால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து நேற்றுமுன்தினம் இரவில் 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் தாமிரபரணியில் திறந்துவிடப்பட்டது. அதிகப்படியான தண்ணீர் திறக்கப்பட்டதால் ஆற்றங்கரையோரத்தில் உள்ள குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

வெள்ளத்தில் மிதந்த வீடுகள்

தொடர் மழையால் மாவட்டத்தில் 3 வீடுகள், தாமிரபரணி கரையோரத்தில் கூட்டு குடிநீர் திட்டத்தில் அமைக்கப்பட்ட சில உறை கிணறுகள் சேதமடைந்தன.

சேரன்மகாதேவி, திருப்புடைமருதூர், வைராவிகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும், திருநெல்வேலி அருகே கொண்டாநகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தாமிரபரணி கரையோர வயல்களிலும் வெள்ளம் புகுந்ததால், நெற்பயிர்கள் மூழ்கின.

திருநெல்வேலி குறுக்குத்துறை முருகன் கோயிலின் கோபுரத்தை மூழ்கடிக்கும் அளவுக்கு தண்ணீர் தாமிரபரணியில் பெருக்கெடுத்தது.

அமைச்சர் ஆய்வு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in