Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM

சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

காரைக்கால் மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள விழிதியூர் கிராமத்தையொட்டி தமிழகப் பகுதியில் அமைந்துள்ள சாலை மிகவும் சிதிலமடைந்து காணப்படுகின்றது.

6 மாதங்களுக்கும் மேலாக இப்பகுதியில் உள்ள சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் இந்த சாலை வழியாக செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். மழைக்காலங்களில் சாலையில் அதிக அளவு நீர் தேங்குவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் நேற்று கொட்டும் மழையிலும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த நிரவி போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x