விழுப்புரம் மாவட்டத்தில் ரூ. 146.52 கோடி பொங்கல் பரிசு

விழுப்புரம் மாவட்டத்தில் ரூ. 146.52 கோடி பொங்கல் பரிசு
Updated on
1 min read

பொங்கல் பண்டிகையை முன் னிட்டு தமிழக அரசு சார்பில் குடும்பஅட்டைகளுக்கு தலா ரூ. 2,500 வீதம் வருகின்ற 4ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. இதற்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு வட்ட வழங்கல் அலுவலரால் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், கண்டாச்சிபுரம், திரு வெண்ணைநல்லூர், திண்டிவனம், மரக்காணம், செஞ்சி, மேல்மலையனூர் என 9 வட்டங் களில் 1,254 நியாயவிலைக் கடைகள் இயங்கி வருகின்றன. இக்கடைகளில் உள்ள 5,85,680 குடும்ப அட்டைகள், இலங்கை தமிழர்களுக்கான 417 குடும்ப அட்டைகள் உட்பட 5,86,097 குடும்ப அட்டைகளுக்கு தலா ரூ. 2,500 வீதம் மொத்தம் ரூ.146 கோடியே 52 லட்சத்து ,42 ஆயிரத்து 500 பொங்கல் பரிசாக வழங்கப்பட உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in