தேனியில் இளைஞர் தற்கொலை

தேனியில் இளைஞர் தற்கொலை
Updated on
1 min read

தேனியில் வேலையில்லாமல் சிரமப்பட்டு வந்த இளைஞர் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி மனஉளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார்.

தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளி தெருவைச் சேர்ந்தவர் சிவபாண்டியன்(29). கணினியில் டிசைனிங் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஓராண்டாக வேலை இல்லாமல் இருந்து வந்தார். மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டார். கடந்த சில நாட்களாக மனஉளைச்சலுடன் இருந்தவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அல்லிநகரம் காவல் ஆய்வாளர் மதனகலா வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in