Published : 29 Nov 2020 03:13 AM
Last Updated : 29 Nov 2020 03:13 AM

புதிதாக 48 பேருக்கு கரோனா தொற்று உறுதி

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டங்களில் புதிதாக 48 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 21 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்து 163-ஆக அதிகரித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாக 2 பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 166 ஆகவும், திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 8 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,218-ஆக அதிகரித்துள்ளது.

திருவண்ணாமலை

தி.மலை மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு மேலும் 17 பேர் நேற்று பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,586-ஆக உயர்ந் துள்ளது. கரோனா தொற்றில் இருந்து 18,195 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x